Published : 04 Apr 2025 06:30 AM
Last Updated : 04 Apr 2025 06:30 AM

சென்னை | சிகரெட் வாங்கி தர மறுத்து திட்​டிய​தால் பெயின்டர் கொலை: இளைஞர் கைது

சென்னை: மேற்கு மாம்​பலம், தம்​பையா சாலை சந்​திப்பு பகு​தி​யில் வசித்​தவர் சங்​கர் (44). பெயின்​டிங் மற்​றும் எலெக்​ரீஷியன் வேலை செய்து வந்​தார். கடந்த 1-ம் தேதி இரவு தலை​யில் பலத்த காயத்​துடன் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்பட்ட சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று அதி​காலை உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​கு பதிந்​து விசாரித்தனர். சங்​கரின் வீட்​டின் அருகே பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​து​ அதனடிப்படையில் அதே பகு​தி​யைச் சேர்ந்த தருண் (23) என்​பவரை கைது செய்தனர். சம்​பவத்​தன்று சங்​கர் அவரது வீட்​டினருகே நின்​றிருந்​தார். அப்​போது, அங்கு மது​போதை​யில் வந்த தருண், சிகரெட் வாங்கி வரச் சொல்​லி​யுள்​ளார்.

இதனால் ஆத்​திர மடைந்த சங்​கர், தருணை அசிங்​க​மான வார்த்​தைகளால் திட்​டி​னார். தருண் கோபமடைந்து சங்​கரை பிடித்து தள்​ளி​யுள்​ளார். இதில், சங்​கர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை​யில் காயம் ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x