கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை: என்ன நடந்தது?

கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை: என்ன நடந்தது?
Updated on
2 min read

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.

ரம்ஜான் நோன்பு இருந்த அவர் நேற்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிவிட்டனர்.

சம்பவ இடத்தில் திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாகவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தினர். தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் கீதா மற்றும் போலீஸார், கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும், ஜாகிர் உசேன் பிலிஜியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு, டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது" என்றனர்.

2 பேர் நீதிமன்றத்தில் சரண்: இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் பிஜிலி வெளியிட்ட வீடியோ பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், தான் கொலை செய்யப்படலாம் என்றும், இந்தக் கொலைக்கு மூலகாரணம் நெல்லை டவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனும், நெல்லை மாநகர உதவி ஆணையர் விஜயகுமாரும்தான் என்று கூறியுள்ளார்.

மேலும், நல்லை டவுன் தொட்டி பாலம் தெரு அருகேயுள்ள தனது 36 சென்ட் இடத்தை அபகரிக்க முயன்றதை தடுத்தேன். அந்த நபர் கொடுத்த பொய் புகாரின் பேரில், நெல்லை டவுன் போலீசார் பிசிஆர் வழக்கு பதிவு செய்தது வெட்கக்கேடு. பட்டியலின இளைஞர் மதம் மாறிய பின்னர், பிசிஆர் பிரிவில் எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் ஜாகீர் உசேன் காணொலியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்: இந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: திமுக ஆட்​சி​யில் சட்​டத்​தின் மீதான அச்​சம் துளி​கூட இல்​லை. இந்​தக் கொலை​யில் தொடர்​புள்ள அனை​வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை: ஓய்​வு​பெற்ற காவல் அதி​காரிக்கே கொலை மிரட்​டல் விடுத்​து, அவரைப் படு​கொலை செய்​யும் அளவுக்கு தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்து போயுள்​ளது.

இதே​போல, பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளதுடன், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in