சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஓசூரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஓசூரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் கைது
Updated on
1 min read

ஓசூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேரை ஓசூரில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி​யில் உள்ள பள்ளி​யில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்​கள். இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்​தி​விட்டு, கட்டிடப் பணிக்கு செல்​லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்க நேற்று முன்​தினம் சென்​றனர்.

அந்தப் பகுதி​யில் கட்டிடப் பணியில் ஈடுபட்​டிருந்த நண்பரை சந்தித்​தனர். அப்போது, அங்குள்ள வீட்​டில் அக்கா, தங்கைகளான 9 மற்றும் 13 வயது சிறுமிகள் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர். இதைப் பார்த்த மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரும் அங்கு சென்று, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாகத் தெரி​கிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து, 5 பேரை​யும் கைது செய்​தனர். தொடர்ந்து ​விசாரணை நடை​பெற்று வரு​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in