Published : 01 Mar 2025 07:04 AM
Last Updated : 01 Mar 2025 07:04 AM

சென்னை | வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மது போதையில் தாக்கிய 3 பேர் கைது

சென்னை: வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாரை மது போதை​யில் தாக்​கிய 3 பேர் கும்​பல் கைது செய்யப்​பட்​டுள்​ளது. தண்​டை​யார்​பேட்டை காவல் நிலைய போலீ​ஸார் கடந்த 26-ம் தேதி இரவு அதே பகு​தி​யில் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர்.

மறு​நாள் அதி​காலை அதே பகுதி டி.எச்​.ரோடு மற்​றும் ரத்​தின சபாபதி தெரு சந்​திப்​பில் வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அவ்​வழியே இருசக்கர வாக​னத்​தில் வந்த 3 பேரை மறித்து போலீ​ஸார் விசா​ரித்​தனர். அப்​போது, இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்த கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்த கோதண்​ட​ராமன் (33) மீது சந்​தேகத்​தின் பேரில், மது போதையை கண்டறி​யும் கருவி மூலம் பரிசோ​தித்​தனர்.

அப்​போது, கோதண்​ட​ராமன் மது அருந்​தி​யிருப்​பது தெரிந்​தது.இதையடுத்​து, அவருக்கு அபராதம் விதித்து இருசக்கர வாக​னத்​தைப் பறி​முதல் செய்து 3 பேரை​யும் அனுப்பி வைத்​தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோதண்​ட​ராமன் உள்​ளிட்டமூவரும் உதவி ஆய்​வாளர் மற்​றும் 3 போலீ​ஸாரிட​மும் தகராறில் ஈடு​பட்டு தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக தண்​டை​யார்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து கோதண்​ட​ராமன் மற்​றும் கொருக்​குப்​பேட்டை தட்​டான் குளத்​தைச் சேர்ந்த கண்​ணன் (25), அதே பகுதி ரங்​க​நாத​புரம் குடிசை மாற்று வாரி​யத்​தைச் சேர்ந்த கலைமணி (27) ஆகிய 3 பேரை​யும் கைது செய்​தனர். தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x