குமரி வழியாக கேரளாவுக்கு கனிமவளம் கடத்திய 4 பேர் கைது

குமரி வழியாக கேரளாவுக்கு கனிமவளம் கடத்திய 4 பேர் கைது
Updated on
1 min read

நாகர்கோவில்: குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு விதிமுறை மீறி கனிமவளம் அதிக அளவில் கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கனிமவளத்துறையின் அனுமதிச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக கனிம வளம் ஏற்றி வந்த 2 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுபோல் தக்கலை உட்கோட்டத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in