உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த டேவிட்வில்சன் (22), பவுல்ராஜ்(22), ஆன்டனி பிரேம்குமார் (23) ஆகியோர் நேற்று முன்தினம் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு, பைக்கில் எலவனாசூர்கோட்டை-எறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

வழியில், எறையூர் கிராமத்தில் வெடிக்கப்பட்ட ராக்கெட், அவர்கள் எடுத்து வந்த பட்டாசு மீது விழுந்தது. தொடர்ந்து பட்டசுகள் வெடித்ததில் 3 பேரும் காயடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், டேவிட்வில்சன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in