தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(58). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்தபிரபு(44) என்பவரது வீட்டிலுள்ளகறவை மாடுகளில் பால் கறந்துகொடுத்துள்ளார். ஆனால், அதற்கான கூலியை 2 மாதங்களாக பிரபு கொடுக்காததால், இதுகுறித்துஅவரிடம் மணி கேட்டுள்ளார்.

இதையடுத்து, 29.5.2020 அன்றுபணம் தருவதாகக் கூறி அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவரது வயலுக்கு பிரபு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மணியை பிரபுவும், அதே ஊரை சேர்ந்த பிரபுவின் ஆதரவாளர்களான ரவுடி ஜெ.தனபால் (47), க.பழனிவேல் (48), பொ.சங்கர்(48) ஆகியோரும் சேர்ந்து உருட்டுக் கட்டை, இரும்புகம்பி போன்றவற்றால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிமருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டும், சிகிச்சை பலனின்றி 1.6.2020 அன்று உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து பிரபு, தனபால், பழனிவேல், சங்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மாவட்டஎஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி(பொ) இந்திராணி, குற்றம்சாட்டப் பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தனபால், பழனிவேல், சங்கர்ஆகியோருக்கு ரூ.2 லட்சத்து 500-ம், பிரபுவுக்கு ரூ.2 லட்சத்து50 ஆயிரத்து 500-ம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், உயிரிழந்த மணியின் மனைவி பஞ்சவர்ணத்துக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவார ணம் வழங்கவும் நீதிபதி உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in