சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: சென்னையில் மேலும் ஒரு பெண் கைது

சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: சென்னையில் மேலும் ஒரு பெண் கைது
Updated on
1 min read

சென்னை: சிறுமிகளை வஞ்சித்து பாலியலில் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்த வழக்கில் மேலும் ஒரு பெண்ணை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய்நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பாலியல் புரோக்கர் தேனாம்பேட்டை நதியா, சுமதி, மாயஒலி, தி.நகர் ராமச்சந்திரன், வளசரவாக்கம் அசோக்குமார், மேற்கு சைதாப்பேட்டை ரமணிதரன் உட்பட 7 பேர்அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

மேலும், தொடர் விசாரணையில் தி.நகரில் ஓட்டல் மேலாளராக பணியாற்றி வந்த தண்டபாணி என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல்செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 2 சிறுமிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் புரோக்கர்களாக செயல்பட்ட மறைமலை நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை மூளைச் சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளிஅதனை வீடியோ எடுத்து மிரட்டிஅடுத்தடுத்து அவர்களை இதில்ஈடுபட வைத்துள்ளது தெரிய வந்தது. சிறுமிகளை பாலியல் கும்பல்வெளிநாட்டு விஐபிக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மூலமும் பாலியல் தொல்லைகளை அளித்தார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in