பிளஸ் 2 மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது

பிளஸ் 2 மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது
Updated on
1 min read

மதுரை: மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித்பிஸ்வாஷ் (40). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், ஒத்தக்கடை -மேலூர் பிரதான சாலையில் உள்ள மிராஸ் நகரில் கிளினிக்நடத்தி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார்.

இந்நிலையில், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் அபிஜித் பிஸ்வாஷ்கிளினிக்கில் சோதனை செய்தனர். அவர் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அபிஜித் விஸ்வாஷை கைது செய்த போலீஸார், அவரது கிளினிக்கில்இருந்து மருந்து. மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in