Published : 20 Mar 2024 04:04 AM
Last Updated : 20 Mar 2024 04:04 AM
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே சகோதரிகள் இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனக்குத் தெரிந்த இளம் பெண்களான சகோதரிகள் இருவரிடம் சென்று `உங்கள் மாமாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது' என்று கூறி இருவரையும் ஏமாற்றி, பைக்கில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு, மறைந்திருந்த 4 இளைஞர்கள் ராஜ் குமாரை அடிப்பது போல லேசாக தாக்கி உட்காரவைத்துவிட்டு, இளம் பெண்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் இருவரும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ராஜ்குமார் மற்றும் 4 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய 3 பேரைப் பிடித்து, போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT