சென்னை | திமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை | திமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Updated on
1 min read

சென்னை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாநகராட்சி, 188-வது வார்டு, மடிப்பாக்கம், திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (39). இவர் கடந்த பிப்ரவரி 2022-ம் ஆண்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள், கூலிப்படையை சேர்ந்த நபர்கள் என 15க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் 14-வது குற்றவாளியான விக்னேஷ் (33) கடந்த 5 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த விக்னேஷைநேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in