

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கம் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே மன்னார் வளைகுடா கடலில் தூக்கி எறியப்பட்டதா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து மண்டபம் கடல் பகுதிக்கு படகு மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுகிறது என மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மண்டபம் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்து படகில் மத்திய வரு வாய் புலனாய்வு துறையினர் வெள்ளிக்கிழமை ரோந்து சென் றனர்.
மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடலில் ரோந்து படகை பார்த்ததும், அவ்வழியாக வந்த படகு ஒன்று வேகமாக சென்றது. அதை கடலோர காவல் படையினர் விரட்டிச் சென்றனர்.
அப்போது படகிலிருந்த நபர்கள் கடத்தல் பொருளை வேதாளை கடல் பகுதியில் வீசினர். அதைத்தொடர்ந்து அவர்களை காவல் படையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கடத்தல் தங்கத்தை கடலில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கடல் பகுதியில் கடலோரக் காவல் படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் மூலம் கடத்தல் தங்கத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.