இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள சின்னகொக்கூர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(22) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(31), செந்தில்குமார்(33) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

2020 பிப்.16-ம் தேதி வீட்டிலிருந்த சரவணனிடம், ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும்ஆடுதுறையைச் சேர்ந்த சகோதரர்கள் சிவக்குமார்(37), ரஞ்சித்(34) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ராமச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் கத்தியால் குத்தியதில் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலையூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சுமத்தப்பட்ட ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி ராஜவேலு நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in