Published : 18 Jan 2024 06:31 AM
Last Updated : 18 Jan 2024 06:31 AM

வாழ்வாதாரத்தை இழந்ததால் சென்னையில் பைக் டாக்ஸி இளைஞர் தற்கொலை

சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் நிலையில், இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததால், வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனியார் பைக் டாக்ஸி வேலை செய்து வந்தார். சமீபத்தில் பாண்டி பஜார் சாலை வழியாக சூரியமூர்த்தி சென்று கொண்டிருந்தபோது, வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தை வைத்துதான் பிழைப்பு நடத்தி வருவதாகவும் வாகனத்தை திருப்பித் தருமாறு போலீசாரிடம் கேட்டதாக தெரிகிறது.

போலீஸார் அபராத தொகையை கட்டிவிட்டு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சூரியமூர்த்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜன.15-ம் தேதி பொங்கல் தினத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சூரியமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார், சூரியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x