மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது

மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது
Updated on
1 min read

மதுரை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி சிறை வளாகத்தில் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக சிறைத் துறை நிர்வாகம் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெயக்குமாரைத் தேடிவந்தனர்.

இதற்கிடையே, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான தனிப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றுகாலை காமராசர் பல்கலைக்கழகம் அருகில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in