செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர மாநில போலீஸால் கைது செய்யப்பட்ட சென்னை தலைமை காவலர் சஸ்பெண்ட்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்ட சென்னை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (45). சென்னைசிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றினார். அந்த காவல் நிலைய ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராகவும் இருந்தார். இந்நிலையில், வழக்கம்போல் கடந்த 17-ம் தேதி இரவு சந்திரசேகர் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.

இந்நிலையில், மறுநாள் ஆந்திர மாநிலம், சத்தியவேடு காவல் நிலைய போலீஸார் சந்திரசேகர் மற்றும் 14 பேரை செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்குவாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரசேகரை, சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in