Published : 21 Nov 2023 07:29 AM
Last Updated : 21 Nov 2023 07:29 AM

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்பிலான ரொக்கம், மது பறிமுதல்

புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல்ஆணையம் கடந்த மாதம் 9-ம்தேதி அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலுக்கு வந்தன.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டன. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும் தெலங்கானாவில் 30-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, இந்த 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல்செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பரிசுபொருட்கள், மது, போதைப்பொருள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 மாநிலங்களில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பைப் போல (ரூ.239.15 கோடி) 7 மடங்கு அதிக மதிப்பிலான பொருட்கள் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, குஜராத், கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் நடந்த தேர்தலின்போது ரூ.1,400 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது 11 மடங்கு அதிகம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x