இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 22 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 22 பேர் கைது
Updated on
1 min read

ராமநாதபுரம்: பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த பிரான்சிஸ் கேசியர் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 10 மீனவர்களும், ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 12 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர்.

இம் மீனவர்கள் சில நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி 2 படகுகளும், நேற்று காலை இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளையும், அதிலிருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

பின்னர் 22 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in