தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 137 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கை கடற்படையால் 3 பேர் கைது

எழுவைத் தீவு கடற்பகுதி | கோப்புப் படம்
எழுவைத் தீவு கடற்பகுதி | கோப்புப் படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 137 கிலோ கஞ்சாவை, யாழ்ப்பாணம் மாவட்டம் எழுவைத் தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும்பாக். நீரிணைப் பகுதி வழியாக, இலங்கைக்கு போதைப்பொருட்கள், கடல் அட்டை உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து போதைப் பொருட்களைக் கடத்தி வருவதாக இலங்கைகடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம், எழுவைத் தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு எழுவைத் தீவு கடற்கரையில்சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த படகில் 3 மூட்டைகளில் 137 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த 3 பேரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கிளிநொச்சி மாவட்டம், பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், தமிழக கடல் பகுதியில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப் பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.1.40 கோடி என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in