சென்னை | தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை | தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நேற்று ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு ஒன்றில், ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, இன்று நடு வானில் பறந்து கொண்டிருக்கும்போது, வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று ஒரு மிரட்டல் பதிவு போடப்பட்டிருநதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஆகாஷா விமான நிறுவனம், தங்களுடைய விமானங்கள் இயக்கப்படும் மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களுக்கு அவசரமாக தகவல் அளித்தது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு மும்பை புறப்படும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த அனைத்து பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும் தீவிரமாக பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in