Published : 25 Sep 2023 04:04 AM
Last Updated : 25 Sep 2023 04:04 AM

சாத்தூரில் பெண் காவலரை வீடியோ எடுத்து மீம்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சத்தூரில் பெண் காவலரை செல்போனில் வீடியோ பிடித்து மீம்ஸ் வெளியிட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கற்பக லட்சுமி (34). இவர், கடந்த 20-ம் தேதி சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி குலாளர் தெருவில் விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

ஓ.மேட்டுப் பட்டியில் புறப்பட்ட ஊர்வலமானது, சாத்தூர் முக்குராந்தல் வரை சென்று பின்னர் ஏழாயிரம் பண்ணை கொண்டு சென்று சிலைகள் கரைக்கப்பட்டன. அப்போது, ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவலர் முத்து லட்சுமியை செல்போனில் வீடியோ எடுத்து மீம்ஸ் வெளியிட்டு, சமூக வலைதளத்தில் பரப்பியது தெரியவந்தது.

இது குறித்து காவலர் கற்பக லட்சுமி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பெண் காவலரை வீடியோ எடுத்து மீம்ஸ் வெளியிட்டது சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப் பட்டியைச் சேர்ந்த நல்லைய ராஜ் (24) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x