திருவள்ளூர் | தலையணையால் அமுக்கி கணவரை கொன்றவர் கைது

திருவள்ளூர் | தலையணையால் அமுக்கி கணவரை கொன்றவர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த 11-ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக வெங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சுத் திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்க லட்சுமி (27) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

குடித்து விட்டு தகராறு..: எனவே, தங்க லட்சுமியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தங்க லட்சுமி கூறியதாவது: எனது கணவர் தினமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் என்னிடம் தகராறு செய்து வந்தார். சம்பவ தினத்தன்றும் கணவர் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்து கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கி அவரை கொலை செய்து விட்டேன் என்றார். இதையடுத்து, போலீஸார் தங்க லட்சுமியை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in