கும்பகோணம் | காவல் நிலையம் முன்பு தீக்குளித்தவர் உயிரிழப்பு

கும்பகோணம் | காவல் நிலையம் முன்பு தீக்குளித்தவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் செக்காங்கண்ணியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி (49). ஓட்டுநர். இவரது மகன் பிரவீன்குமார்(22). இவரை வழிப்பறி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனிப்படை போலீஸார் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தனது மகனைப் பார்ப்பதற்காக ஜான்பென்னி நேற்று முன்தினம் மாலை காவல் நிலையம் சென்றார். ஆனால், பிரவீன்குமாரை பார்க்க போலீஸார் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த ஜான்பென்னி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்பென்னி, அங்கு சிகிச்சைபலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலையபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in