காஞ்சிபுரம் | ரூ.10,000 லஞ்சம்: மாநகராட்சி ஊழியர் கைது

காஞ்சிபுரம் | ரூ.10,000 லஞ்சம்: மாநகராட்சி ஊழியர் கைது
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது சொத்துகளை தனது மகன்கள் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார்.

சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றில் பெயர் மாற்றம் செய்யக் கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவை அனுப்பியுள்ளார். அங்கு பணி செய்யும் ஊழியர் ரேணுகா என்பவர் பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சுந்தர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை ஆலடி தோப்பு தெருவில் ஆய்வுப்பணியில் இருந்த ரேணுகாவை சந்தித்து சுந்தர் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரேணுகாவை கைது செய்தனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in