Published : 26 Aug 2023 06:20 AM
Last Updated : 26 Aug 2023 06:20 AM

சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலை: குடும்பத்தினர் மறியல்

சென்னை: மயிலாப்பூர், நொச்சி நகரில் வசித்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரசன்னா (38). இவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.

பலமுறை கூறிய பிறகும் தகாத உறவு தொடர்ந்ததால், கணவரை கண்டிக்கும்படி பிரசன்னாவின் மனைவி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவ்வப்போது புகார் அளித்துவந்துள்ளார்.

அவ்வாறு நேற்று முன்தினம் இரவும் புகார் அளிக்கச் சென்றார். அப்போது பிரசன்னாவின் வீட்டுக்கு வந்த சிலர் அவரை கொலை செய்துவிட்டுத் தப்பினர். வீடுதிரும்பிய அவரது மனைவி, கணவர் இறந்து கிடப்பதைக் கண்டு மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலமுறை புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கைஎடுக்கத் தவறியதாக கூறி மெரினா உட்புற சாலையில் பிரசன்னா தரப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை சமசரம் செய்து, போலீஸார் கலைந்து செல்ல வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக சீனிவாசன் (42) என்பவரை போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மயிலாப்பூர் டுமிங்குப்பத்தைச் சேர்ந்த டோமினிக் (35) என்பவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x