Published : 16 Aug 2023 07:04 AM
Last Updated : 16 Aug 2023 07:04 AM

சென்னை | கத்தி முனையில் இளைஞரிடம் வழிப்பறி செய்தவருக்கு சிறை

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (26). இவர்கடந்த 12-ம் தேதி இரவு அயனாவரம், நியூ ஆவடி சாலையில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியே வந்த நபர் ஒருவர், ராஜ்கமலிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

ராஜ்கமல் தராததால் அவரை கல்லால் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளிக் காப்பு ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு துப்பு துலக்கினர்.

இதில், வழிப்பறியில் ஈடுபட்டது அயனாவரம், நியூ ஆவடி சாலை பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (55) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை அயனாவரம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x