மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை

மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை
Updated on
1 min read

சென்னை: மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் அர்ஜூன் (32). கூலித் தொழிலாளியான இவரது சொந்த ஊர் கடலூர். அர்ஜூனுடன் அவரது தாய்மாமன் கந்தபெருமாள் (62) என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கந்தபெருமாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மடிப்பாக்கம் போலீஸார், கந்தபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தபெருமாள் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே, அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனிடையே, அர்ஜூன் மாயமாகி உள்ளார். எனவே, கந்தபெருமாளை அவர்தான் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக தலைமறைவாக உள்ள அர்ஜூனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in