

திண்டுக்கல்: தனது சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ராமையன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சசிக்குமார்(50). இவர், கடந்த 2011 மே 2-ம் தேதி தனது சொந்த மகளை பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் சசிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சரண், குற்றம்சாட்டப்பட்ட சசிக் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சசிக்குமாரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.