காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை
Updated on
1 min read

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான இவர், திருவள்ளூரில் ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ளகூனிபாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் ரூ. 7 லட்சத்தை கருணாகரனுக்கு கடனாக அளித்துள்ளார்.

வங்கியில் பணமில்லாமல்.. அந்த தொகையை கருணாகரன் காசோலைகளாக நாராயணமூர்த்திக்கு கடந்த 2020-ம் ஆண்டுதிருப்பி அளித்துள்ளார். வங்கியில் பணமில்லாமல் அந்த காசோலைகள் திரும்பியதால், நாராயணமூர்த்தி, கடந்த 2020-ம்ஆண்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணை முடிவில் கருணாகரன் காசோலைமோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி தீர்ப்பு அளித்தார்.

அத்தீர்ப்பில், காசோலை மோசடி செய்த குற்றத்துக்கு கருணாகரனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து விரைவுநீதிமன்ற நடுவர் தீர்ப்பளித்தார்.

நிபந்தனை ஜாமீன்: மேலும், ரூ.7 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் நாராயணமூர்த்தியிடம் கருணாகரன் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தரவிட்ட விரைவுநீதிமன்ற நடுவர், கருணாகரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியதோடு. அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in