போக்சோ வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்த தேனி கைதி உயிரிழப்பு

போக்சோ வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்த தேனி கைதி உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை: தேனி மாவட்டம், கோம்பை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (63). இவர் 2017-ல் ‘ போக்சோ ’ வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கடந்த 12-ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே சிறை நிர்வாகம் மதுரை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிறை அலுவலர் முனீஸ் திவாகர் கொடுத்த புகாரின்பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in