Published : 08 Oct 2022 08:43 PM
Last Updated : 08 Oct 2022 08:43 PM

தமிழகத்தில் புதிதாக 366 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 210, பெண்கள் 156 என மொத்தம் 366 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 86,584 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து ,43,691 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 497 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் விவரம்: 56-வயதான செங்கல்பட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் கடந்த 5-ம் தேதி கரோனா தொற்றின் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு தீவிரம் காரணமாக மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் இருந்த நிலையில், கரோனா தீவிரம் காரணமாக அவர் அன்றையே தினமே உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 387 ஆகவும், சென்னையில் 88 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,797 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 29,251 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3,884 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 218.93 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x