Published : 25 Aug 2022 08:17 PM
Last Updated : 25 Aug 2022 08:17 PM

தமிழகத்தில் புதிதாக 542 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 319, பெண்கள் 223 என மொத்தம் 542 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 79 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 65,562 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 22,032 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 675 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,496 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் விபரம் : தஞ்சாவூரைச் சேர்ந்த 48வயதான ஆண் ஒருவர் நீரிழிவு நோய் பாதிப்புடன் கடந்த 14-ம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு காய்ச்சல், இருமல், சுவாச்சுக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்த நிலையில், ஆர்டிபிசிஆர் சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. கரோனா, நுரையீரல் செயலிழப்பு, காரணமாக அவர் கடந்த 23-ம் தேதி மாலை 6 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 547 ஆகவும், சென்னையில் 82 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 10,725 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 94,047 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

13,084 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 210.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x