Published : 22 Jul 2022 08:23 PM
Last Updated : 22 Jul 2022 08:23 PM

தமிழகத்தில் புதிதாக 2,033 பேருக்கு கரோனா; ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,168 பெண்கள் 865 என மொத்தம் 2,033 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 466 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 28,384 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 74,199 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,383 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 16,153 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்றும் இன்றும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் விவரம்: 84 வயதான முதியவர் ஒருவர் 18-ம் தேதி விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 19-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையிலிருந்த அவர் நுரையீரல் செயலிழப்பு காரணமாக இன்று அதிகாலை 12 மணி அளவில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,093 ஆகவும், சென்னையில் 516 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 21,880 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1,49,482 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,219 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 201.30 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x