2,000-ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 2,069 பேருக்கு கரோனா; சென்னையில் 909 பேர் பாதிப்பு

2,000-ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 2,069 பேருக்கு கரோனா; சென்னையில் 909 பேர் பாதிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,122, பெண்கள் 947 என மொத்தம் 2,069 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 909 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து, 75,185 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து ,26,065 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,008 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,094 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,827 ஆகவும், சென்னையில் 771 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு இப்போது 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 18,819 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 13,827 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு தன்மை எத்தகையது?

முன்னதாக, கரோனா பரவல் தீவிரமடைந்து வருவது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் டி.நேரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

“தற்போது பரவிவரும் கரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும், இதன் தாக்கத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவோ, செயற்கை சுவாசம் தேவைப்படவோ இல்லை. உயிரிழப்புகளும் அதிகம் இல்லை. மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரை கடந்த கரோனா அலை பரவலின்போது பின்பற்றப்பட்ட அதே சிகிச்சை முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in