Published : 18 Jun 2022 07:46 PM
Last Updated : 18 Jun 2022 07:46 PM

600-ஐ நெருங்கும் பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 334, பெண்கள் 262 என மொத்தம் 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 295 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 60,182 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 19,083 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 217 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 3,073பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 589 ஆகவும், சென்னையில் 286 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 13,216 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 68,108 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் 8,148 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 196 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x