தமிழகத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 25, பெண்கள் 19 என மொத்தம் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,556ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 16,107 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 424 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 42 ஆகவும், சென்னையில் 24 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,827 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,70,165 என அதிகரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in