Published : 08 May 2022 07:23 PM
Last Updated : 08 May 2022 07:23 PM

தமிழகத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 26, பெண்கள் 21 என மொத்தம் 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,353 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,850 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 478 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 89 ஆகவும், சென்னையில் 30 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,451 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது; 3,079 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,57,495 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,635 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x