Published : 04 May 2022 06:25 AM
Last Updated : 04 May 2022 06:25 AM

நாட்டில் புதிதாக 2,568 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,568 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர்.

மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,30,84,913 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 5,23,889 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 363 குறைந்து, 19,137 ஆகஉள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,911 பேர் குணமடைந்தனர். இதுவரை 4,25,41,887 பேர் (98.74சதவீதம் பேர்) குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x