Published : 24 Apr 2022 05:11 AM
Last Updated : 24 Apr 2022 05:11 AM

24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்தனர். மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 5,22,149 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 832 அதிகரித்து 15,079 ஆக உள்ளது.

குணமடைந்தோர் 98.75 சதவீதமாக உள்ளனர். சுமார் 83.42 கோடி பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. இதுவரை 187.46 கோடி டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x