Published : 10 Mar 2020 05:55 PM
Last Updated : 10 Mar 2020 05:55 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி

ஈரானில் கரோனா வைரஸுக்கு அதிகபட்சமாக இன்று 54 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஈரானில் கோவிட் - 19 காய்ச்சலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 54 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். மேலும் புதிதாக 881 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஈரானில் கரோனா வைரஸால் இதுவரை 8,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்”
என்று தெரிவித்தார்.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் ஏப்ரல் மாதம் வரை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x