“என் நட்சத்திர அந்தஸ்துக்கு காரணமானவர் ஆர்.பி.சவுத்ரி” - சரத்குமார் புகழஞ்சலி

“என் நட்சத்திர அந்தஸ்துக்கு காரணமானவர் ஆர்.பி.சவுத்ரி” - சரத்குமார் புகழஞ்சலி
Updated on
1 min read

என் நட்சத்திர அந்தஸ்துக்கு காரணமானவர் என்று ஆர்.பி.சவுத்ரி மரணம் குறித்து சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியதில் முன்னணி நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சவுத்ரி மரணம் குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பதிவில், “புகழ்பெற்ற தயாரிப்பாளரும், நண்பரும், என் வழிகாட்டியும், என் தத்துவஞானியும், என் நட்சத்திர அந்துஸ்துக்கு காரணமானவர் ஆர்.பி.சவுத்ரி. அவர் துரதிர்ஷ்டவசமாக கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பல தசாப்தங்களாக திரைப்படங்கள் மூலம் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவு கூரப்படும்” என்று தெரிவித்துள்ளார் சரத்குமார். அவர் நடித்த ‘சூர்யவம்சம்’ படத்தினை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி சரத்குமாரை முன்னணி நாயகர்களில் ஒருவராக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in