ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு நடிக்கும் புதிய படம்

ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு நடிக்கும் புதிய படம்
Updated on
1 min read

சென்னை: 'ரைட்டர்' படத்தின் இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், பிரபு முதன்மை வேடத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. 

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் ஏவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

டார்க் ஹியூமர் பாணியில் திரில்லர்-காமெடி படமாக உருவாக்கப்படவுள்ள இதன் தொடக்க விழாவில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இப்படத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் பிரபு, "ஃபிராங்க்ளின் ஒரு அருமையான கதையைச் சொன்னார், இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதைக்களத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டார். மேலும் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ஃபிராங்க்ளினின் படைப்பாற்றலையும், யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு நடிக்கும் புதிய படம்
சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உலகம் முழுவதும் ரூ.200+ கோடி வசூல் சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in