“தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி” - ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் பா.ரஞ்சித் கருத்து

“தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி” - ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் பா.ரஞ்சித் கருத்து
Updated on
1 min read

’ஜனநாயகன்’ விவகாரத்தில் நடந்திருப்பது தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியே என்பது அப்பட்டமாகவே தெரிகிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு சிக்கல் தொடர்பாக திரையுலகினர் பலரும் தணிக்கை துறையினரை கடுமையாக சாடி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.

அதேபோல, 'பராசக்தி' திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன்.

ஆனால், ஜனநாயகன் படத்துக்கு நிகழ்ந்திருப்பது என்பது தணிக்கைத் துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது.

மேலும், மாற்றுக் குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத் தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இதுபோன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத் துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

“தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி” - ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் பா.ரஞ்சித் கருத்து
‘‘தணிக்கை சான்றிதழ் வழங்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்’’ - கமல்ஹாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in