செந்தாமரை அப்பாவும் என் சினிமா பயணமும் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 14

செந்தாமரை அப்பாவும் என் சினிமா பயணமும் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 14
Updated on
3 min read

நாங்​கள் சென்னை வந்த போது, நடிப்​ப​தற்​காக வாய்ப்பு தேடிய என் அக்​காவை டப்​பிங் பக்​கம் திருப்​பியது நடிகர் செந்​தாமரை அப்​பா​தான் என்று ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன். ஆர்​எம்​.எஸ்​.உதய​பாஸ்​கரன் என்ற என் பெயரை நியூம​ராலஜி படி எம்​.எஸ்​.​பாஸ்​கர் என்று மாற்றி வைத்​ததும் அவர்​தான்.

என் அக்கா டப்​பிங்​கில் பிசி​யாக இருந்த போது நானும் அவருடன் செல்​வேன். அப்​போது யார் யார் டப்​பிங் பேசுகிறார்​களோ, அவர்​களை போல நானும் மனதுக்​குள் பேசிப் பார்ப்​பேன். அது ஆணாக இருந்​தா​லும் சரி, பெண்​ணாக இருந்​தா​லும் சரி.

டப்​பிங் பேசுவது என்​பதும் நடிப்​பு​தான். குரலை ஏற்ற இறக்​கத்​துடன் பேசி நடிப்​பது போன்​றது என்​ப​தால் எனக்​குள் நடிப்பு ஆசை இயல்​பாகவே வந்து விட்​டது. பிறகு சின்ன சின்ன கதா​பாத்​திரங்​களுக்கு நானும் டப்​பிங் பேச ஆரம்​பித்​தேன்.

கே.​விஜயன் இயக்​கத்​தில் சிவகு​மார் அண்​ணன் நடித்த ‘ஆணிவேர்’ (1981) படத்​தில், சின்​னவயது சிவகு​மாருக்கு நான் டப்​பிங் பேசினேன். அப்​படியே பேசிக்​கொண்​டிருந்​தா​லும் சரி​யான வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. பிறகு ஒரு கம்​பெனி​யில் வேலைக்கு சேர்ந்​தேன். அதிலிருந்து விலகி மறு​படி​யும் டப்​பிங் பணிக்கு வந்​தேன்.

ஆரூர்​தாஸ், மருத​பரணி, எம்​.ஏ.பிர​காஷ், அமரர் தேவ நாராயணன் ஆகியோர் படங்​களில் பேச ஆரம்​பித்​தேன். அப்​படி இருக்​கும் போது இயக்​குநர் ‘பசி’ துரை அவர்​களின் படங்​களில் பேச வாய்ப்பு கிடைத்​தது. அவர் நன்​றாக பழகி​னார்.

அப்​போது அவர் வீட்​டுக்​குத் தின​மும் காலை​யில் சென்று நிற்​பேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்​கள் என்று உரிமை​யாகக் கேட்​பேன். அவரும் சரி என்​பார்.அப்​படி ஒரு நாள் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்​தது.

இத்​தனை நாள் கனவு நனவாக போகிற ஆசை​யில் சென்​றேன். சின்ன கேரக்​டர்​தான். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள மகாத்மா காந்தி கல்​லூரி​யில் படப்​பிடிப்​பு. அங்​கு​தான் கேமரா முன்​னால் முதன் முதலாக நின்​றேன். அந்​தப் படம் ‘புனித மலர்’. அதில் ஒய்​.ஜி.மகேந்தி ரன், ‘ஒருதலை ராகம்’ ரவீந்​தர் எல்​லோரும் நடித்​துக் கொண்​டிருந்​தார்​கள்.

(என் தலை​யில் முடி இருந்த காலம் அது.) நான் கல்​லூரி மாணவ​னாக நடித்​தேன். தமிழ், மலை​யாளம் இரண்டு மொழிகளி​லும் எடுத்​தார்​கள். இரண்டு மொழி​யிலும் நானே டப்​பிங் பேசுவேன் என்று பேசினேன். என்ன காரணத்​தாலோ அந்​தப்படம் வெளி​யாக​வில்​லை. என் முதல் படம்வெளி​யா​காத​தால் வருத்​த​மாக இருந்​தது.

பிறகு நடிப்​ப​தற்​கான வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. டப்​பிங்​குக்கு வந்​து​விட்​டேன். இயக்​குநர் விசு அண்​ணா​வின் படங்​களுக்கு டப்​பிங் பேசும்​போது, நடிக்க வாய்ப்பு வேண்​டும் என்று அவருக்​குத் தொல்லை கொடுப்​பேன். அவர் இயக்​கத்​தில் உரு​வான ‘திரு​மதி ஒரு வெகும​தி’ (1987) படத்​தில் எனக்கு சிறிய கதா​பாத்​திரத்​தில் நடிக்க வாய்ப்பு கொடுத்​தார். நான் நடித்து வெளி​யான முதல் திரைப்​படம் அது​தான்.

<div class="paragraphs"><p>செந்தாமரை, விசு, ‘பசி’ துரை </p></div>

செந்தாமரை, விசு, ‘பசி’ துரை

அதி​லும் கல்​லூரி​யில் ஈவ் டீஸிங் செய்​யும் மாணவ​னாக நடித்​திருப்​பேன். இந்த படத்​துக்கு பிறகும் பெரிய வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. டப்​பிங்​தான் பேசிக் கொண்​டிருந்​தேன். மக்​கள் என் பக்​கம், காவல் கீதம், சேலம் விஷ்ணு உள்​ளிட்ட சில படங்​களில் சின்ன சின்ன வேடங்​களில் நடித்​தேன். பிறகு டி.​வி.சீரியல் வாய்ப்பு வந்​தது.

மகிழ்ச்​சி​யாக அதில் நடிக்​கத் தொடங்​கினேன். அப்​போது டி.​வி.சீரியலில் நடித்​துக் கொண்​டிருப்​பவர்​களை தனது படத்​தில் நடிக்க வைக்​கலாம் என்று இயக்​குநர் அழகம்​பெரு​மாள், ‘டும் டும் டும்’ படத்​தில் டாக்​டர் வேடத்​தில் என்னை நடிக்க வைத்​தார்.

அதில் திருநெல்​வேலி பேச்​சுவழக்​கில் பேசி நடித்​திருப்​பேன். அதை அழகம் பெரு​மாள் ரொம்ப ரசித்​தார். அதற்​குப் பிறகு சீரியலில் நடித்​துக் கொண்​டிருந்​தா​லும் சினிமா​வில் வாய்ப்​பு​கள் குறை​வாகத்​தான் வந்​தன! வந்த சின்ன சின்ன வேடங்​களில் நடித்​துக் கொண்டு சீரியலை​யும் தொடர்ந்து கொண்​டிருந்​தேன்.

அப்​போது ஓர் இயக்​குநர் பாஸு, “நீ நல்லா நடிக்​கிறே, சீரியல், சினிமான்னு ரெண்​டுல​யும் பண்​ணிட்​டிருந்​தா, சினிமாவுக்கு கூப்​பிட மாட்​டாங்க. சினிமாவுல பிசி​யாகணும்​னா, நீ இந்​தப் பக்​கமே வந்​துரு. ஏதாவது மெகா தொடர்ல மாட்​டிக்​கிட்​டா, கால்​ஷீட் பிரச்​சினை வரும்” என்று சொன்​னார். அது சரியென்று பட்​டது. அதற்கு பிறகு சினிமா பக்கம் முழு​மை​யாக வந்​தேன். பிறகு கொஞ்​சம் கொஞ்​ச​மாக பட வாய்ப்​பு​கள் வந்​து, என்னை நிலை நிறுத்​தி​ன.

அதற்கு எனக்கு வாய்ப்​புக் கொடுத்த, கொடுக்​கின்ற, கொடுக்க இருக்​கும் இயக்​குநர்​கள், தயாரிப்​பாளர்​கள், புரொடக் ஷன் மானேஜரில் இருந்து அனை​வருடைய ஆதர​விலும்​தான் இப்​போது தேசிய விருது வாங்​கும் அளவுக்கு வந்​திருக்​கிறேன்! அவர்​களுக்கு எப்​போதும் என் நன்​றிகள்உண்​டு.

என் அக்​காவை டப்​பிங் லைனில் திருப்​பி, எனக்கு அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து நான் இந்​தளவுக்கு வளர்ந்​திருக்​கிறேன் என்​றால் அதற்கு செந்​தாமரை அப்​பா​வின்​ ஆசிர்​வாத​மும்​ காரணம் என்​ப​தை என்​னால்​ மறக்​க முடி​யாது.

(திங்கள்தோறும் பேசுவோம்)

செந்தாமரை அப்பாவும் என் சினிமா பயணமும் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 14
நாராயண ஐயர் அல்லது மோதிரம் நாராயணன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in