தளபதி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32

தளபதி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
Updated on
2 min read

இப்​போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்​வ​ராகி இருக்​கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்​கிற காலங்​களி​லேயே எனக்கு தெரி​யும். அவருடைய தாய்​மாமா எஸ்​.என்​.சுரேந்​தர் என் நண்​பர். சுரேந்​தரின் சகோ​தரர் காலஞ்​சென்ற சுந்​தரும் நானும் அண்​ணன் தம்பி போல பழகி வந்​தோம்.

இன்​றும் எஸ்​.என்​.சுரேந்​தருடன் அதே நெருக்​கத்​தில்​தான் இருக்​கிறேன். விஜய்​யின் அம்​மா​வான ஷோபாவை, அக்கா என்று அழைக்​கிற அளவுக்​கும் தந்தை எஸ்​.ஏ.சந்​திரசேகரை மாமா என்​றழைக்கற அளவுக்​கும் நான் அவர்​களுக்கு நெருக்​க​மானவன்.

விஜய்​யின் சித்தி ஷீலா​வை, அக்கா என்​றழைக்​கும் அளவுக்​கும் அவர் கணவர் சிவாவை மாமா என்று அழைக்​கும் அளவுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வ​னாகப் பழகிய​வன். இப்​போதும் அப்​படித்​தான் பழகு​கிறேன்.

அடிக்​கடி அவர்​கள் வீட்​டுக்​குப் போவேன். சுரேந்​தரும் என் வீட்​டுக்கு வரு​வார். ஷோபா அக்​கா​வின் அப்பா நீல​கண்​டனை நானும் அப்பா என்​று​தான் அழைப்​பேன். எஸ்​.ஏ.சந்​திரசேகர் மாமா​வின் பல படங்​களில் நான் டப்​பிங் பேசி​யிருக்​கிறேன். அவரை எப்​போதும் சந்​திக்க எனக்கு உரிமை உண்​டு.

விஜய் நடிப்​பில் மஜித் இயக்​கிய ‘தமிழன்’ படத்​தில் நான் கண்​டக்​ட​ராக நடித்​தேன். அப்​போதே விஜய் பெரிய நடிக​ராகி​விட்​டார். அதன் படப்​பிடிப்​பில் அவரிடம் சென்று என்னை ஞாபகம் இருக்​கா?” என்று கேட்​டேன். “பார்த்​திருக்​கேன், என்​றார். பிறகு நான் ஞாபகப்​படுத்​திச் சொன்​னதும் ஆமா என்று கேட்​டுக்​கொண்​டார்.

பிறகு இடை​யில் சில காலம் இடைவெளி விழுந்​து​விட்​டது. அப்​போது ஒரு நாள் எஸ்​.ஏ.சந்​திரசேகர் மாமாவை பார்க்​கச் சென்​ற​போது, “என்ன ஆளே காணோம். கண்​டக்​டர் ஆயிட்​டி​யா?” என்று கிண்​டலாக கேட்​டார். “இல்​லை​யே, ஏன்?” என்று கேட்​டேன்.

“தமிழன் படத்​துல கண்​டக்​டர் மாதிரி அப்​படியே இயல்பா பண்​ணி​யிருந்​தி​யே, அதனால கேட்​டேன்” என்​றார். நான் சிரித்​துக்​கொண்​டேன். பிறகு அதிக படங்​களில் நான் நடிக்​க​வில்​லை. அடுத்​து, திருப்​பாச்​சி, சிவ​காசி, வேலா​யுதம், காவலன் என பல படங்​களில் விஜய்​யுடன் நடித்​திருக்​கிறேன். அப்​போதெல்​லாம் ரொம்ப ஜாலி​யாக எல்​லோரும் உட்​கார்ந்து பேசிக்​கொண்​டிருப்​போம். எல்​லோரிட​மும் அன்​பாக, “சாப்​பிட்​டீங்​களா?” என்று விசா​ரிப்​பார்.

ஒரு முறை டப்​பிங் தியேட்​டரில், அவர் உள்ளே பேசிக்​கொண்​டிருக்​கார் என்​றனர். நான் வேறொரு படத்​துக்கு டப்​பிங் பேசிக்​கொண்​டிருந்​தேன். அவர் வெளியே வந்​து,

என்​னைப் பார்த்​ததும் இரண்டு கையை​யும் விரித்து “எப்​படி​யிருக்​கீங்​க?” என்று கட்​டிப் பிடித்​துக்​கொண்​டார்.

இப்​போது சில ஆண்​டு​களாக அவரை நேரில் பார்க்​க​வில்​லை. தூரத்​தில் இருந்து பார்த்து ரசித்​துக்​கொண்​டு​தான் இருக்​கிறேன். பெரிய நட்​சத்​திர​மாக அவர் உயர்ந்​திருப்​ப​தில் மட்​டற்ற மகிழ்ச்​சி.

அழகாக பாடக்​கூடிய, அற்​புத​மாக நடன​மாடக் கூடிய, அதிரடி​யான சண்​டைக்​காட்​சிகளில் வீரம் காட்​டக் கூடிய பிர​மாத​மாக நடிக்​கக்​கூடிய திறமை​யான பிள்ளை அவர். சங்​கீத ஞானம் அவருக்கு வந்​த​தில் ஆச்​சரியப்பட வேண்​டிய​தில்​லை. அவருடைய மாமா சுரேந்தர், அம்மா ஷோபாக்கா ஆகியோர் நன்​றாக பாடு​பவர்​கள் என்​ப​தால் அதில் ஆச்சரியமில்​லை.

இப்​போது முதல்​வ​ராகி மக்​கள் சேவை செய்ய இருக்​கிறார். உலகெங்​கும் இருக்​கக்​ கூடிய அவருடைய ரசிகர்​களின் அன்​பும் அரவணைப்​பும் இந்​தளவுக்கு உயர்த்தி இருக்​கிறது என்​பது ஒரு பக்​கம் இருந்​தா​லும் அவருடைய கடுமை​யான உழைப்​பும், அவர் ஏற்​றுக்​கொள்​கிற கேரக்​டர்​களில் காட்​டு​கிற ஈடு​பாடும், உடன் நடிப்​பவர்​களை மட்​டுமல்​லாமல், எல்​லோரை​யும் மதிக்​கிற பண்​பும் சேர்ந்​து​தான் அவரை இந்​தளவுக்கு உயர்த்தி இருக்​கிறது என நான் நினைக்​கிறேன்.

என் குடும்​பத்​தில் என் மனை​வி, மகன், மகள் எல்​லோருமே அவருடைய ரசிகர்​கள்​தான். அவர் கட்சி தொடங்​கி, 2 ஆண்​டு​களுக்​குள் ஆட்​சியை பிடிக்​கிற அளவுக்கு மக்​களிடம் அன்பை சம்​பா​தித்​திருக்​கிறார் என்​பதை நினைக்​கும்​போது எனக்​குள் மகிழ்ச்சி நில​வு​கிறது.

ஆண்​ட​வன் அவருக்கு நீண்ட ஆயுளை​யும் நல்ல ஆரோக்​கி​யத்​தை​யும் அற்​புத​மான ஆட்​சியை தரக்​கூடிய திறமை​யை​யும் தர வேண்​டும் என்று இறைவனை வேண்​டிக் கொள்​கிறேன். வாழ்த்​துகள், தமிழக முதல்​வர் விஜய் அவர்​களே!

தளபதி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
நடிகர் பிரம்​மானந்​தம் வைத்த நம்​பிக்​கை - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in