‘டோரதி’ எழுப்பும் கேள்விகள் சர்வதேச பார்வையாளர்களுக்கும் பொருந்தும்: கார்த்திக் சுப்புராஜ் நம்பிக்கை

‘டோரதி’ எழுப்பும் கேள்விகள் சர்வதேச பார்வையாளர்களுக்கும் பொருந்தும்: கார்த்திக் சுப்புராஜ் நம்பிக்கை
Updated on
1 min read

கார்த்​திக் சுப்​பு​ராஜ் இயக்​கி​யுள்ள ‘டோர​தி’ திரைப்​படத்​தில் கீர்த்தி சுரேஷ் நாயகி​யாக நடித்​துள்​ளார். சனந்த், ரிஷி​காந்த் உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைத்​துள்​ளார். ஜியோ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்​படத்​தை, தம்​மம் ஃபிலிம்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து சிக்யா என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்​துள்​ளது.

இப்​படம் டொரான்டோ சர்​வ​தேசத் திரைப்பட விழா​வில் ‘சென்​டர்​பீஸ்’ பிரி​வில் திரை​யிடப்​பட்​டது. 10 வருடங்​களுக்​குப் பிறகு இங்​குத் திரை​யிடப்​படும் முதல் இந்​தி​யத் தமிழ்த் திரைப்​படம் இது. படம் முடிந்​ததும் பார்​வை​யாளர்​கள் எழுந்து நின்று பாராட்​டினர்.

இதுகுறித்து கார்த்​திக் சுப்​பு​ராஜ் கூறும்​போது, “நான் நெருக்​க​மாக அறிந்த இடத்​தில் இருந்​தும், கலாச்​சா​ரத்​தில் இருந்​தும் உரு​வான கதை​தான் ‘டோர​தி’. இப்​படம் எழுப்​பும் நட்​பு, பாரபட்​சம் மற்​றும் மனிதர்​களுக்கு இடையி​லான தொடர்பு குறித்த கேள்வி​கள் உலகளா​விய பார்​வை​யாளர் களுக்​கும் பொருந்​தும்.

டொரன்டோ பட விழா​வில் இப்​படம் திரை​யிடப்​பட்​டது எனக்கு ரொம்​பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்​பிய கதை​யின் உண்​மைத்​தன்​மையை உலகம் முழு​வதும் உள்ள பார்​வை​யாளர்​களிடம் கொண்டு செல்​லும் வாய்ப்பை இது கொடுத்​துள்​ளது. மேலும், இளை​ய​ராஜா​வின் இசை இந்​தப் பயணத்​துக்​குத் துணை​யாக இருப்​பது இந்​தப்​படத்​துக்கு மேலும் சிறப்பு சேர்த்​துள்​ளது” என்​றார்.

‘டோரதி’ எழுப்பும் கேள்விகள் சர்வதேச பார்வையாளர்களுக்கும் பொருந்தும்: கார்த்திக் சுப்புராஜ் நம்பிக்கை
மலையாள திரையுலகிலேயே அதிக வசூல்: ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in