க்ரைம் த்ரில்லராக உருவான ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’

க்ரைம் த்ரில்லராக உருவான ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’
Updated on
1 min read

அஸ்​வின் குமார் நாயக​னாக நடித்​துள்ள வெப் தொடர் ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’. இது ஆஹா ஓடிடி தளத்​தில் வெளி​யாகி​யுள்​ளது. இதை ஜெஸ்​வினி எழு​தி, இயக்​கி​யுள்​ளார். குரு லட்​சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்​மா, சவுந்​தர்​யா, ஷியமந்தா கிரண், ரவிவர்​மா, பிர்லா போஸ், விஸ்​வாமித்​ரன், சுரேந்​தர் விஜே, ரஞ்​சனா என பலர் நடித்​துள்​ளனர்.

பேரபிள் பிக்​சர்ஸ் சார்​பில் தேவன் சார்​லஸ், பிர​வீன் குமார், சரண்யா வீரமணி ஆகியோர் தயாரித்​துள்​ளனர். இந்த க்ரைம் த்ரில்​லர் தொடருக்கு என்​.எஸ்​.சதீஷ்கு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். அஷ்வத் இசையமைத்​துள்​ளார்.

“தூள் பேட்டை பகு​தி​யில் துணை ஆணை​ய​ராகப் பொறுப்​பேற்​கும் அஷ்​வின் குமார், அங்கு நடக்​கும் 3 கொலைகள் பற்​றிய விசா​ரணையை தொடங்குகிறார். முதல் இரு எபிசோடு​களில் க்ரைம் த்ரில்​லர் அம்​சங்களுக்கு துளி​யும் குறை​வின்றி ஏராள​மான கேள்வி​களை எழுப்​பும் திரைக்கதை, ரசிகர்​களுக்கு சுவாரஸ்​யத்தை ஏற்​படுத்​தும்” என்​கிறார்​ இயக்​குநர்​.

க்ரைம் த்ரில்லராக உருவான ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’
ஹனிரோஸின் ‘ரேச்சல்’ ரிலீஸ் தள்ளி வைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in