“தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சம்!” - இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் நேர்காணல்

“தமிழ் சினிமாவில்  பாடகர்களுக்கு பஞ்சம்!” - இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் நேர்காணல்
Updated on
2 min read

விஜய் சேதுபதி ஹீரோ​வாக அறி​முக​மான, தென்​மேற்கு பரு​வக்​காற்​று, மதயானைக் கூட்​டம், நீர்ப்​பறவை, அயோத்​தி, போகுமிடம் வெகுதூரமில்லை உள்​ளிட்ட பல படங்​களுக்கு இசை அமைத்​தவர் என்​.ஆர்​.ரகுநந்​தன். வார்த்​தைகளை மூழ்​கடிக்​காத மென் இசைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கும் அவர், பல சூப்​பர் ஹிட் பாடல்​களைக் கொடுத்​திருக்​கிறார். தற்​போது பல்​வேறு படங்​களுக்கு இசை அமைத்து வரும் அவர், “தமிழ் சினி​மா​வில் பாடகர்​களுக்​குப் பஞ்​சம் இருக்​கிறது” என்​கிற கவலையை வெளிப்​படுத்​துகிறார்.

Q

எப்​படி? சூப்​பர் சிங்​கர் மாதிரி​யான இசை நிகழ்ச்​சிகள்ல இருந்து நிறைய பாடகர்​கள் திறமை​யாகவே வர்​றாங்​கன்னு சொல்​றாங்​களே...

A

அவங்க எல்​லாரும் நல்லா பாடுறாங்க. ஆனா, சினிமா பாடல்​களை மட்​டுமே அவங்க பாடக்​கூ​டாது. அந்​தப் பாடல்​களை ஏற்​கெனவே வேறொரு பாடகர் பாடி​யிருப்​பார், அதையே பாடும்​போது அந்த பாடகர்​தான் நம்ம ஞாபகத்​துக்கு வரு​வார். எஸ்​.பி.பி சார் பாடலோ, சுசீலாம்மா பாடலையோ பாடி​னா, அவங்​க​தானே ஞாபகத்​துல வர்​றாங்க, பாடற இவங்க வரமாட்​டாங்க.

அதனால இவங்க தங்​களோட தனித்​திறமையை வளர்த்​துக்​கணும். ஒரு புது டியூனை கொடுத்​தா, அதை எப்​படி ‘இம்ப்​ர​வைஸ்’ பண்​ணிப் பாட​ணுங்கற திறமை இருந்​தா​தான் சினி​மாவுல நிலைக்க முடி​யும். அப்​படி இல்​லை​னா, புது பாடகர் கிடைக்​க​மாட்​டாங்க. என்னை பொறுத்​தவரை தமிழ் சினி​மாவுல இப்போ பாடகர்​களுக்கு கடுமை​யான பஞ்​சம்னே சொல்​லு​வேன்.

Q

ஆச்​சரியமா இருக்​கே?

A

ஆச்​சரியப்பட என்ன இருக்​கு? அந்​தக் காலத்​துல டி.எம்​.எஸ், பி.சுசீலா, ஜிக்​கி, ஜமுனா ராணி, பி.பி.ஸ்ரீனி​வாஸ், ஏஎம்​.​ராஜான்னு நிறைய பாடகர்​கள் இருந்​தாங்க. அடுத்து எஸ்​.பி.பி, யேசு​தாஸ், வாணி ஜெய​ராம், ஷைலஜா, எஸ்​.என்​.சுரேந்​தர், மலேசியா வாசுதேவன்னு ஒரு பெரிய டீம் உரு​வாச்​சு.

அடுத்​தக் காலக்​கட்​டத்​துல மனோ, சுஜா​தா, ஸ்வர்​ணல​தா, ஹரிஹரன், சங்​கர் மகாதேவன் என நிறைய பேர் இருந்​தாங்க பிறகு சின்​ம​யி, ஹரிச்​சரண், கார்த்​திக், ஸ்வேதா மோகன், சைந்​தவி மாதிரி சிலர் இருக்​காங்க. இவங்​களுக்​குப் பிறகு அடுத்த தலை​முறை பாடகர்​கள்னு யாரும் உரு​வாகலை​யே. இது​தான் உண்​மை. தமிழ் சினி​மாவுல பாடகர்​களுக்கு பெரிய பஞ்​சமிருக்​கு. அதனால​தான் மற்ற மொழிகள்ல பாடகரை தேடிப் பிடிச்சு பாட வைக்​கிறோம்.

Q

இன்​னைக்கு புதிய இசை அமைப்​பாளர்​கள் அதி​கமா வர்​றாங்க. இதனால போட்டி கடுமையா இருக்​குன்னு நினைக்​கிறீங்​களா?

A

அது ஆரோக்​கிய​மான போட்​டி​தான். போட்டி இருந்​தா​தான் கடினமா உழைக்​கணுங்கற எண்​ணம் வரும். அதை போட்​டின்​னும் சொல்ல முடி​யாது. இன்​றைய இளம் இசை அமைப்​பாளர் களோட சேர்ந்து பயணிக்​கறதை, சிறப்​பான பயணம்​னு​தான் சொல்ல முடி​யும்.

இன்​றைய கால​கட்​டத்​துல திறமை​யும் கடுமை​யான உழைப்​பும் இருந்தா மட்​டுமே சினி​மாவுல நிலை​யான இடம் கிடைக்​கும். யாருடைய இசை, பாடல் ஹிட்​டாகுதோ, அவங்​க​தான் முன்​னணிக்​குச் செல்ல முடி​யும். அவங்​களுக்​கான அங்​கீ​காரம் கிடைச்​சுட்​டு​தான் இருக்​கு. அதனால இளம் இசை அமைப்​பாளர்​கள் அதி​கம் வர்​றதை ஆரோக்​கிய​மானதுன்னு சொல்​லலாம்.

Q

‘ரெடிமேட் இன்​ஸ்ட்​ரூமென்ட்​ஸ்’ காரண​மாகத்​தான் இசை அமைப்பாளர்​கள் அதி​கமா வர்​றாங்​களா?

A

ஒரு லேப்​டாப், கீ போர்டு இருந்தா போதும், யார் வேணும்​னாலும் புரோக்​கி​ராம் பண்​ணலாம். ஆனா, ‘கிரியேஷன்’ வேற​தானே. அந்த இசை அறிவு இருந்​தா​தான் நிலைக்க முடி​யும். அது​தான் வெற்​றி​பெறும். கையில கம்பு வச்​சிருக்​கிற எல்​லோருமே சிலம்​பம் ஆட முடி​யாதுல்ல. மக்​களுக்​குப் பிடிக்​கிற பாடல்​களைக் கொடுக்​கிறவங்​க​தான் வெற்றி பெற முடி​யும்.

Q

இப்ப வர்ற சினிமா பாடல்​கள் ‘ஃபாஸ்ட் பீட்​’டுக்கு மாறிடுச்​சுன்​னும் மெலடி குறைஞ்​சிடுச்​சுன்​னும் பேச்சு இருக்​கே?

A

காலத்​துக்கு ஏற்ப இசை மாறிட்டே இருக்​கும். இப்​ப​வும் மெலடி இருக்​கு. அது எப்​படி இருக்​குன்​னா, உலக அளவுல இசைக் கலைஞர்​கள் எப்​படி பண்​றாங்க அப்​படிங்​கறதை பொறுத்து மாறிட்டே இருக்​கு. அந்​தப் பாடல்​களை கேட்​டு, அது மாதிரி ஒரு பாடலை பண்​ணணும்னு இங்​க​யும் பண்​றாங்க. அப்ப இசை மாறத்​தான் செய்​யும். ரசனை மாறும்​போது, இசை​யும் மாறித்​தானே ஆகணும். இன்​றைய காலம் ரொம்ப வேக​மானது. எல்​லோரும் நிற்க நேரமில்​லாம ஓடிக்​கிட்​டிருக்​காங்க.

அவங்​களுக்கு ஏற்ப இசை​யும் பாடல்​களும் மாறு​வது​தானே முறை. ஆரம்ப கால சினி​மாவுல கூத்து ஸ்டைலில் பாடல்​கள் இருக்​கும். பிறகு பாகவதர் காலத்​துல கிளாசிக்​கல் பாடல்​கள் வந்​தன. சி.ஆர்​.சுப்​ப​ராமன் காலத்​துல ஸ்டைல் கொஞ்​சம் மாறிச்​சு. கேவி.ம​காதேவன் கிளாசிக்​கல் மற்​றும் மெல்​லிசையை சேர்த்​துக்​கொடுத்​தார். அடுத்து எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஜாஸ், ராக் இசையை மிக்ஸ் பண்​ணி​னார்.

அதுல இருந்து மொத்​தமா மாறு​பட்டு மண்​சார்ந்த இசையை சினி​மாவுக்​குக் கொண்டு வந்​தார் இளை​ய​ராஜா. கிராமத்து நாட்​டுப் புறப்​பாடலை வெஸ்​டர்ன் கிளாசிக்​கல்ல மிக்ஸ் பண்​ணினா எப்​படி இருக்​கும்ங்​கறதை அவர் காண்​பிச்​சார். அடுத்து ஏ.ஆர்​.ரஹ்​மான் சார் வெஸ்​டர்னை இன்​னொரு முறை​யில தமிழ் திரை​யிசை​யில பயன்​படுத்​தி​னார். இந்த மாற்​றத்​துக்கு பிறகு இன்​னொரு டிரெண்ட் செட்​டர் வரு​மான்னு தெரியல. வராதுன்​னு​தான் நினைக்​கிறேன்.

Q

இப்போ என்​னென்ன படங்​களுக்கு இசை அமைக்​கிறீங்க?

A

யோகி பாபு கதை நாயக​னாக நடிக்​கும் படம், ‘காக்கா முட்​டை’ மணி​கண்​டனின் உதவி​யாளர் பகவான்​ கிருஷ்ணா இயக்​கும்​ ‘விழா நாயகன்​’, அறி​முக இயக்​குநர்​ சரவணகு​மார்​ இயக்​கும்​ படம்​னு சில படங்​களுக்​கு இசை அமைக்​கிறேன்​.

“தமிழ் சினிமாவில்  பாடகர்களுக்கு பஞ்சம்!” - இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் நேர்காணல்
‘மீசைய முறுக்கு 2’ பட விழாவில் கடும் நெரிசல்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய ஹிப்ஹாப் ஆதி - பின்னணி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in