

‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார், எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் நிவாஸ், மகாவீர் அசோக் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டு படக்குழுவை பாராட்டினார். படம் பற்றி கிஷோர் ராஜ்குமார் கூறும்போது, “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. ஃபீல் குட் உணர்வை தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்” என்றார்.