’ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு பெரும் வரவேற்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி

’ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு பெரும் வரவேற்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி
Updated on
1 min read

’ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படம் வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘ஆண்பாவம் பொல்லாதது’.

தமிழக வசூலில் இதுவரை ஒட்டுமொத்த வசூலில் 20 கோடியை கடந்திருக்கிறது. இதன் மூலம் ஷேர் தொகையாக 10 கோடியை தொட்டுள்ளது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இந்த வசூல் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை முன்னதாகவே படக்குழு விற்றுவிட்டது.

2025-ம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படங்கள் பட்டியலில் கண்டிப்பாக ‘ஆண்பாவம் பொல்லாதது’ இடம்பெறும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாளவிகா மனோஜ், ஷீலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் ரியோ ராஜ் உடன் நடித்திருந்தனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தினை ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டது ஏஜிஸ் நிறுவனம்.

’ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு பெரும் வரவேற்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி
புதிதாக இசை நிறுவனம் தொடங்க அனிருத் திட்டம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in